திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு
Mar 16 2017 10:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள், திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கோகோ, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 100 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் எஸ்.ஆர்.சி. கல்லூரி மாணவி தனலட்சுமி முதலிடத்தையும், உயரம் தாண்டுதலில் ஹோலி கிராஸ் பள்ளி மாணவி காயத்ரி முதலிடத்தையும் பெற்றனர். இப்போட்டிகளை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.