ஐ.சி.சி. தலைவர் பதவியிலிருந்து இந்தியாவின் சஷாங் மனோகர் ராஜினாமா : ஆச்சிரியமளிப்பதாக பி.சி.சி.ஐ. தகவல்
Mar 16 2017 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.சி.சி. தலைவர் பதவியிலிருந்து இந்தியாவின் சஷாங் மனோகர் திடிரென ராஜினாமா செய்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ஆச்சிரியமளிப்பதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர், கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றார். அவர் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் ஐ.சி.சி.க்கு விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயை பிரித்துக்கொடுப்பதில் பாரபட்சம் பார்ப்பதாக மனோகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தனிப்பட்ட காரணங்களுக்காக மனோகர் ராஜினாமா செய்வதாகவும், அடுத்த தலைவர் நியமிக்கும் வரை தலைமைச் செயல் அதிகாரி கூடுதலாக தலைவர் பொறுப்பை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஷாங் மனோகர் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ, அவரது இந்த திடீர் முடிவு ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு மனோகரின் பங்களிப்பு விலைமதிப்பில்லாதது எனவும் பி.சி.சி.ஐ. பாராட்டு தெரிவித்துள்ளது.