காரைக்காலில் நடைபெற்ற தேசிய பீச் வாலிபால் போட்டி : தமிழக மகளிர் அணி சாம்பியன்
Mar 20 2017 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்காலில் நடைபெற்ற தேசிய பீச் வாலிபால் போட்டியில், தமிழக மகளிர் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில், 17-வது தேசிய பீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதன் மகளிர் பிரிவு இறுதியாட்டத்தில் தமிழக அணியும், தெலங்கானா அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், தெலங்கானாவை தோற்கடித்து தமிழக அணி சாம்பியன் கோப்பையை வென்றது. இதேபோல் ஆடவர் இறுதிப் போட்டியில், ஆந்திரா அணி வெற்றிபெற்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.