புதுச்சேரியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு தடகளப் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு
Apr 24 2017 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறப்பு ஒலிம்பிக் புதுச்சேரி என்ற அமைப்பு சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் உப்பளத்தில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டுஎறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.