அமெரிக்காவில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 35வது உலகக்கோப்பை பாய்மரப் படகுப் போட்டி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது
Apr 27 2017 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
1851-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இதுவரை பிரிட்டிஷ் அணி வெற்றிபெற்றது இல்லை. ஆனால் இந்த ஆண்டு பிரிட்டனின் லேண்ட் ரோவர் பார் அணி வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டியில், ஒவ்வொரு அணியும் 5 படகுகளுடன் போட்டியில் பங்கேற்கின்றன. கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற 34வது உலகக்கோப்பை போட்டியை அமெரிக்காவின் ஆரக்கிள் அணி வென்றது. ஆரக்கிள் அணித் தலைவர் Ben Ainslie இந்த ஆண்டு பிரிட்டனின் லேண்ட் ரோவர் அணிக்கு தலைமை வகிக்கிறார். இதனால், இந்த ஆண்டு பிரிட்டன் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 166 ஆண்டுகால வரலாற்றில் அமெரிக்காவுக்கு எதிராக பிரிட்டன் முதன் முறையாக கோப்பையை வெல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.