திருவாரூரில் நடைபெற்று வந்த மாநில அளவிலான மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி : சென்னையைச் சேர்ந்த மாணவி கோப்பையை தட்டிச் சென்றார்

Apr 27 2017 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூரில் நடைபெற்று வந்த மாநில அளவிலான மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த மாணவி திவ்யலெட்சுமி ஏழரை புள்ளிகள் பெற்று கோப்பையை தட்டிச் சென்றார்.

45வது தமிழ்நாடு மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூரில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, மதுரை, சேலம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து 94 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியின் நிறைவு நாளான இன்று புள்ளிகள் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த மாணவி திவ்யலெட்சுமி ஏழரை புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சென்னை மாணவி பால கண்ணம்மா இரண்டாவது இடத்தையும், ரிந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்து பரிசு கோப்பைகளை பெற்றனர். மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடித்த மாணவிகள் வரும் ஜூலை மாதம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மகளிருக்கான செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00