பார்சிலோனா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி : ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டோம்னிக் இன்று மோதல்
Apr 30 2017 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டோம்னிக் ஆகியோர் இன்று மோத உள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில், நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான, பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டோம்னிக் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில், 6-2, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் முர்ரேவை தோற்கடித்த டோம்னிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில், ஆர்ஜெண்டீனா வீரர் Horacio-வை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்த ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
இதையடுத்து, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில், ரஃபேல் நடால் மற்றும் டோம்னிக் ஆகியோர் மோத உள்ளனர்.