இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் : ஜப்பானின் Kazumasa Sakai-ஐ வீழ்த்தி இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்
Jun 18 2017 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் இறுதியாட்டத்தில், ஜப்பானின் Kazumasa Sakai-ஐ வீழ்த்தி இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தோனோஷியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்ற இப்போட்டியில், தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகின் 47-வது நிலை வீரரான ஜப்பானின் Kazumasa Sakai-ஐ எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், 21-11, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் Sakai-ஐ தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், இந்தோனேஷியா சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் பெற்றார்.