புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி - சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் - ஏராளமானோர் கண்டுகளிப்பு
Jun 21 2017 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை அடுத்த கல்லுக்காரன்பட்டி மாணிக்காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் இதில் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.