ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் தொடர் - இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
Jun 22 2017 4:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி. சிந்து முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுவரும் இத்தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் பி.வி. சிந்து, சீன வீராங்கனை Chen Xiaoxin-ஐ எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21க்கு 13, 21க்கு 18 என்ற புள்ளிக் கணக்கில் சீன வீராங்கனையை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
ஏற்கெனவே, ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், தற்போது மகளிர் பிரிவில் சிந்துவும் காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.