திருச்சியில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான தரவரிசை சதுரங்க போட்டி : 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்பு
Jun 24 2017 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு சதுரங்கம் மற்றும் ராக்ஃபோர்ட் செஸ் அசோசியேஷன் சார்பாக, திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், அகில இந்திய அளவிலான தரவரிசை சதுரங்க போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டி, 8 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு தரவரிசையில் முன்னேற்றம் வழங்கப்படும். மேலும், முதல் 8 இடங்களை பிடிப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.