திருச்சியில் மாநில அளவிலான குஸ்தி போட்டி தொடக்கம் : 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
Jun 26 2017 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் மாநில அளவிலான குஸ்தி போட்டி தொடங்கியுள்ளது. 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
கிரீஸ் நாட்டினை தாயகமாக கொண்ட grappling என்ற விளையாட்டு, தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது. இது குஸ்தி விளையாட்டு என அழைக்கப்படுகிறது. அமெச்சூர் grappling ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான குஸ்தி சாம்பியன்பட்டப் போட்டி, திருச்சியில் உள்ள அண்ணா உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம் உட்பட 9 மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆடவர், மகளிர் ஆகிய இரு பிரிவுகளாக நடைபெற்று வரும் இப்போட்டியில், வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. போட்டியில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக அணி சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவார்கள்.