வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இளம் வீரர் ரிஷப் பாண்ட்டுக்கு வாய்ப்பு - இந்திய கேப்டன் விராட் கோலி சூசகம்

Jun 26 2017 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் இளம் வீரர் ரிஷப் பாண்ட் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கேப்டன் விராட் கோலி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களிலும் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், அடுத்துவரும் போட்டிகளில் அணியில் சில பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள கேப்டன் விராட் கோலி திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள கோலி, ஆன்டிகுவாவில் நடைபெறும் 3-வது போட்டிக்கான அணியில் சில புதிய வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், இளம் வீரர் ரிஷப் பாண்ட் அணியில் இடம்பெறலாம் என்பதையே கோலி சூசகமாகக் கூறியுள்ளார். கடந்த ஃபிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் அறிமுகமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பாண்ட், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00