ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி - மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் யஷஸ்வினிசிங் தேஷ்வால் தங்கம் வென்று அபாரம்
Jun 26 2017 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் தொடரின், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில், இந்தியாவின் யஷஸ்வினிசிங் தேஷ்வால் தங்கம் வென்று முத்திரைப் பதித்தார்.
ஜெர்மனியின் சூல் நகரில், சர்வதேச துப்பாக்கிச்சுடும் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில், ஜுனியர் பிரிவினருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த 22-ம் தேதி தொடங்கின. இத்தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில், இந்தியாவின் யஷஸ்வினிசிங் தேஷ்வால், 235.9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். கொரிய வீராங்கனை கிம்வூரி 2-வது இடத்தைப் பிடித்தார். கடந்த 3 ஆண்டுகளில், இதுவரை 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தேஷ்வால், தற்போதுதான் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம், பதக்கப் பட்டியலில் இந்தியா, 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.