விருதுநகரில் 100 விதமான யோகசனங்களை 5 நிமிடங்களில் செய்து 5-ம் வகுப்பு மாணவி சாதனை
Aug 5 2017 8:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகரில் 100 விதமான யோகசனங்களை 5 நிமிடங்களில் செய்து 5-ம் வகுப்பு மாணவி சாதனை படைத்துள்ளார்.
விருதுநகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி ஏஹர்ஷா நிவேதா, குறைந்த நிமிடங்களில் அதிக யோகாசனங்களை செய்து உலக சாதனை படைக்க திட்டமிட்டார். அதன்படி, மாவட்ட ஆட்சியர் திரு. சிவஞானம், ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பைச் சேர்ந்த விவேக் ஆகியோர் முன்னிலையில், மாணவி சாதனை முயற்சியில் ஈடுபட்டார். கண்களை துணியால் கட்டிக்கொண்டு, 4 நிமிடங்கள் 59 விநாடிகளில் 100 விதமான யோகசனங்களை செய்து காட்டி பார்வையாளர்களை அசத்தினார். தொடர்ந்து, 2 கண்ணாடி டம்ளர்களில் கைகளை ஊன்றி கால் தலையில் படாமல், 1 நிமிடம் 42 விநாடிகளில் யோகாசனங்களை செய்து சாதனை படைத்தார்.
இதன்மூலம், இந்தியன் மற்றும் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி ஏஹர்ஷா நிவேதாவுக்கு, சாதனை படைத்தற்கான சான்றிதழ் வழங்கப்பட்டன. அத்துடன், மாணவியின் இந்த சாதனையை, கின்னஸ் இடம்பெற பரிந்துரை செய்யப்படவுள்ளது.