திருச்சியில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டி : 16 பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்பு
Aug 22 2017 10:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் 16 பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தன்னார்வ அமைப்பு சார்பில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 16 பள்ளிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனுடைய மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டுப் போட்டியில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மின்பந்து எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.