ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் போட்டி : இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி
Aug 22 2017 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.
23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 21 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 21-12 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் செர்ஜி சிரான்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில், உலக போட்டியில் இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து களம் காணுகிறார்.