கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி - இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை
Sep 17 2017 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தென் கொரியாவில் உள்ள Seoul நகரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் Nozomi Okuharaவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து-வுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மூன்றாவது சுற்றில் தனது அபார ஆட்டத்தால் பி.வி. சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் ஜப்பானின் Nozomi Okuhara-வை 22க்கு 20, 11க்கு 21, மற்றும் 20க்கு 18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கொரிய ஓபன் பேட்மிண்டன் தொரை பி.வி.சிந்து கைப்பற்றினார்.
இதன்மூலம் கொரிய பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.