திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் கபடி போட்டிக்கான வீராங்கனைகள் தேர்வு போட்டி : ஆர்வமுடன் ஏராளமானோர் பங்கேற்பு
Sep 18 2017 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் மாநில அளவிலான ஜூனியர் கபடி போட்டிக்கான வீராங்கனைகள் தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் 44வது மாநில அளவில் நடைபெறவுள்ள ஜுனியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி,சேலம் மாவட்டம், சங்ககிரியில் வரும் 28ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்க, திருச்சி மாவட்ட வீராங்கனைகளை தேர்வு செய்யும் போட்டி, மாவட்ட அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது. இதில் ஜுனியர் போட்டியில் பங்கேற்கும் முனைப்புடன் திரளானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சிறந்த ரைடர், கேட்சர் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய 15பேர் கொண்ட அணி தேர்வுசெய்யப்பட்டது. இவர்கள் மாநில அளவிலான ஜுனியர் போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பில் பங்கேற்று விளையாடுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.