ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி : 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் கால் இறுதிக்கு முன்னேற்றம்
Sep 22 2017 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர்.
ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21 க்கு 12, 21 க்கு 11 என்ற நேர்செட் கணக்கில் ஹாங்காங்கை சேர்ந்த ஹூ யுன்னை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்ரீகாந்த் கால் இறுதியில் டென்மார்க் நாட்டை சேர்ந்த உலக சாம்பியன் விக்டர் ஆக்ஸ்செல்சனை எதிர்கொள்கிறார்.
இதற்கிடையே கொரியா ஓபன் சூப்பர் சீரிசில் சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் நேற்று வெளியான புதிய தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.