கரூரில் மாநில அளவிலான ஜூனியர் சிலம்பாட்ட போட்டி : திருவள்ளூர் மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது
Oct 11 2017 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் சிலம்பாட்ட போட்டியில், திருவள்ளூர் மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
கரூரில், 36-வது மாநில அளவிலான ஜூனியர் சிலம்பாட்ட போட்டிகள், தாந்தோன்றிமலை அரசுக்கல்லூரியில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், கரூர், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 25மாவட்டங்களிலிருந்து 625 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 14, 15, 16 வயது என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பிடித்து சாதனை படைத்தது. சென்னை மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.