இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - தமிழக வீரர் அஷ்வின் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை
Nov 27 2017 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாக்பூரில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையியலான முதல் டெஸ்ட் போட்டி, ஏற்கெனவே டிராவில் முடிவடைந்த நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா, கேப்டன் விராட் கோலியின் இரட்டை சதத்தாலும், புஜரா, முரளி விஜய், ரோஹித் சர்மா ஆகியோரின் அபார சதத்தாலும், 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், இந்தியா 389 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, போட்டியின் 4-ம் நாளான இன்று தொடர்ந்து பேட்டிங் செய்தது. இந்திய அணி வீரர்களின் அபார பந்துவீச்சால், இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எந்தஒரு கட்டத்திலும் இந்திய அணியை சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறினர்.
முடிவில், அந்த அணி 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியைத்தொடர்ந்து, 3 டெஸ்ட் கொண்ட இத்தொடரில் இந்தியா 1-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக, தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது இந்தப் போட்டியின் மற்றொரு சிறப்பு அம்சமாக இருந்தது.