உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி : தங்கம் வென்று இந்திய வீராங்கனை மிராபாய் சானு சாதனை
Nov 30 2017 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் மிராபாய் சானு உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் 23 வயது மிராபாய் சானு புதிய உலக சாதனை படைத்துள்ளார். மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில், ஸ்னாட்ச்-ல் 85 கிலோ, கிளீன் & ஜெர்க்-ல் 109 கிலோ என மொத்தமாக 194 கிலோ எடையைத் தூக்கி, மிராபாய் சானு உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் படுதோல்வி அடைந்த மிராபாய், இந்த சாதனை வெற்றியால் ஆனந்த கண்ணீர் வடித்தார். தன் பயிற்சியாளருக்கு மிராபாய் நன்றி தெரிவித்துக் கொண்டார். உலக பளு தூக்கும் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் சானு பெற்றுள்ளார்.