21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆஸ்திரேலியாவில் கோலாகலத் தொடக்கம் - வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் வியப்பு
Apr 5 2018 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. வண்ணமயமான கலை நிகழ்ச்சியில், இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் உலகின் 3வது பெரிய விளையாட்டு திருவிழாவாக வர்ணிக்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டி, இம்முறை ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா இயற்கை எழில்கொஞ்சும் கோல்ட்கோஸ்ட் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சியில் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர்.
ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெறுவது இது 5-வது முறையாகும். இந்த போட்டியின் மூலம் அதிகமுறை காமன்வெல்த் போட்டியை நடத்திய நாடு என்ற பெருமையை ஆஸ்திரேலிய பெற இருக்கிறது. இதுபற்றி கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் கம்யூனிட்டி அம்பாசிடர் பழனிச்சாமி தரும் கூடுதல் தகவல்களைக் காண்போம்.
11 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில், இந்தியா உட்பட 71 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 500 வீரர்-வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கின்றனர். இதில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 474 வீரர்-வீராங்கனைகளை களம் இறக்குகிறது. இந்தியா சார்பில் மட்டும் 219 பேர் களமிறங்குகின்றனர்.