காமன்வெல்த் பளு தூக்குதலில் தொடர்கிறது இந்தியாவின் தங்க வேட்டை - 69 கிலோ மகளிர் எடைப்பிரிவில் பூனம்யாதவ் தங்கம் வென்று அபாரம்
Apr 8 2018 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இன்று இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. பளு தூக்குதல் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், இந்த பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில், தற்போது பளு தூக்குதல், பேட்மிண்டன், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில், 5ம் நாளான இன்றும் பளு தூக்குதல் பிரிவில் இறுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. மகளிர் 69 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியாவின் சார்பில், பூனம் யாதவ் பங்கேற்றார். அவர் மிக அபாரமாக செயல்பட்டு 222 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் தாயகத்திற்கு தங்கம் பெற்று தந்தார். இதையடுத்து, பளு தூக்குதலில் மட்டும் இந்தியா பெற்ற 5வது தங்கமாக இது அமைந்தது. இதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனுபக்கர் தங்கப்பதக்கத்தை வென்றார். இதே போட்டியில் 2ம் இடம் பிடித்த மற்றொரு இந்திய வீராங்கனை ஹீனா சித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா 6 தங்கம் மற்றும் 2 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 9 பதக்கங்களைப் பெற்று 4ம் இடத்தில் உள்ளது.