காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீவிரமடைந்த போராட்டத்தின் எதிரொலி - சென்னையிலிருந்து இடம் மாறுகிறது ஐபிஎல் போட்டிகள் - கேரள மாநிலம் கொச்சியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்
Apr 11 2018 4:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் வலுத்துவரும் நிலையில், சென்னையில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகள், வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. மேலும், நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டம் வெடித்தது. இந்நிலையில், போராட்டத்தின் எதிரொலியாக சென்னையில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகள் கேரள மாநிலம் கொச்சியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ஐபிஎல் போட்டிகளை கேரளாவில் நடத்த அம்மாநில கிரிக்கெட் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.