திருச்சியில் கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனம் : மாணவ, மாணவியர் நிகழ்த்திய சாதனை
May 25 2018 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில், கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு 20 நிமிடங்கள் தொடர் ஆசனங்களை மேற்கொண்டு மாணவ, மாணவியர் நிகழ்த்திய சாதனை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வை அளிக்கும் யோகாசனத்தைக் கற்றுக்கொள்வதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வம்காட்டி வருவதோடு, தாங்கள் பயின்ற யோகாவினைக் கொண்டு சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், திருச்சியில் பல்வேறு யோகா நிலையங்களில் யோகாசனம் பயின்ற 20 மாணவ - மாணவியர்கள், புதிய சாதனை படைக்கும் முயற்சியாக, 20 நிமிடங்கள் இருக்கைகளில் பலூன்களை வைத்துக்கொண்டு பல்வேறு ஆசனங்களை நிகழ்த்தி சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
உடலுக்கு நன்மை பயக்கும் பத்மாசனம், தித்திப்பாசனம், கந்தபேருண்டாசனம், காகாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டி பார்வையாளர்களை அசத்தினர்.