திண்டுக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி : மகளிர் பிரிவில் சென்னை அரைஸ் அணி - ஆண்கள் பிரிவில் சென்னை ஐ.சி.எப் அணி கோப்பை வென்றன
Jun 4 2018 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், மகளிர் பிரிவில் சென்னை அரைஸ் அணியும், ஆண்கள் பிரிவில், சென்னை ஐ.சி.எப் அணியும் கோப்பையை வென்றன.
தமிழ்நாடு கூடைப்பந்தாட்டக் கழகம் சார்பில், ஆண்கள் மற்றும் மகளிருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, திண்டுக்கல் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற மகளிருக்கான இறுதிப் போட்டியில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. அணியை எதிர்கொண்ட சென்னை அரைஸ் அணி, 56-க்கு 42 என்ற புள்ளி கணக்கில் வென்று கோப்பையை பெற்றது.
ஆடவருக்கான இறுதிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த ஐ.சி.எப். அணியும், கஸ்டம்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 82-க்கு 66 என்ற புள்ளி கணக்கில் கஸ்டம்ஸ் அணியை வென்ற வென்ற ஐ.சி.எப் அணிக்கு கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.