ரமலான் நோன்பு காலத்தில் பிறந்தநாள் கேக் வெட்டிய பாகிஸ்தான் வீரர் : தனது செயலுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் யூனுஸ்
Jun 5 2018 5:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புனித ரமலான் நோன்பு காலத்தில் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனுஸ் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த வாசிம் அக்ரமின் பிறந்த நாள் ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது வக்கார் யூனுசும், வாசிம் அக்ரமும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். தற்போது, உலகம் முழுக்க புனித ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பிறந்த நாள் கேக் வெட்டியதற்கு ரசிகர்கள் மற்றும் முஸ்லிம் மக்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, வக்கார் யூனுஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ரமலான் நோன்பு சமயத்தில் நடைபெற்ற இந்த தவறுக்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.