பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஸ்பெயினின் ரஃபேல் நாடல் இறுதிப் போட்டிக்கு தகுதி
Jun 9 2018 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவை வீழ்த்தி ஸ்பெயினின் ரஃபேல் நாடல் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
பாரீசில் நடைபெற்றுவரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 'நம்பர் ஒன்' வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ரபேல் நடால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் சுற்றை 6-4 என்ற கணக்கிலும், இரண்டாவது சுற்றை 6-1 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 6-2 என்ற கணக்கிலும் கைப்பற்றினார். இதையடுத்து, ரபேல் நடால் 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.