சர்வதேச யோகா தினம் : புதுச்சேரியில் 121 பெண்கள் பங்குபெறும் 36 மணி நேர தொடர் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி
Jun 22 2018 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரியில் 121 பெண்கள் பங்குபெறும் 36 மணி நேர தொடர் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கும், மஹாயோகம் என்ற அமைப்பின் சார்பில் யோகா, தியானம் மூலம் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, யோகாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள், இந்தியா புக் ரெக்கார்டு மூலம் யோகா சாதனை செய்தனர். மேலும் 2017-ஆம் ஆண்டு 36 பேர், 57 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்து, கின்னஸ் சாதனை படைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் 121 மகளிர் பங்கேற்கும் 36 மணி நேர தொடர் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சி இன்று தொடங்கியது. பொதுமக்களிடம் உடல், மன ஆரோக்கியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நாளை இரவு 7 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சியை முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.