உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு முதல்முறையாக முன்னேறியது குரோஷியா - அரையிறுதியில் கடுமையாகப் போராடி தோற்றுப்போனது இங்கிலாந்து
Jul 12 2018 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்தை 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வென்ற குரோஷியா, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில், குரோஷியா, இங்கிலாந்து அணிகள் மோதின. மாஸ்கோவில் நடைபெற்ற ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் Trippier முதல் கோல் அடித்தார். 68-வது நிமிடத்தில் குரோஷியாவின் Perisic ஒரு கோலடித்து பதிலடி தந்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.
பின்னர் இரு அணியினருக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 109-வது நிமிடத்தில் குரோஷியாவின் Mandzukic ஒரு கோலடித்தார். இதன்பின்னர், இங்கிலாந்து அணியினரால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் குரோஷிய அணி, 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
வரும் 15-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில், குரோஷியா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.