ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் ரூ.8.40 கோடிக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை : தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி
Dec 19 2018 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில், 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ஆல்ரவுண்டரான வருண் சக்கரவர்த்தி, 20 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலையில் இருந்து 42 மடங்கு அதிகரித்த நிலையில், 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி கூறுகையில், 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி தன்னை ஏலம் எடுத்தது நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும், அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கே ஏலம் போவேன் என நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.