சிட்னி டெஸ்டில் 622 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளர் செய்தது இந்தியா - இரட்டை சத வாய்ப்பை தவறவிட்டார் புஜாரா
Jan 4 2019 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிட்னியில் நடைபெற்றுவரும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 622 ரன்களுக்கு முதல் இன்னிங்சை டிக்ளர் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 4 விக்கெட்டுக்கு 303 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்திய அணி இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. சதம் அடித்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்த புஜாரா, இன்றும் அபாரமாக விளையாடி மேலும் ரன்களை குவித்தார். இரட்டை சதத்தை நோக்கி முன்னேறிய அவர் 193 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரிஷப் பந்த்தும் அபாரமாக பேட் செய்து சதம் அடித்தார்.
ரிஷப் பந்த்துடன் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் அதிரடியாக விளையாடி தன் பங்கிற்கு 81 ரன்கள் குவித்தார். அணியின் ஸ்கோர் 7 விக்கெட்டுக்கு 622 ரன்களாக இருந்தபோது, முதல் இன்னிங்சை டிக்ளர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.