ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு - தமிழக அரசு உதவினால் ஒலிம்பிக்கிலும் சாதனை படைப்பேன் என நம்பிக்கை
Apr 26 2019 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய தடகள போட்டியில், தங்கம் வென்று நாடு திரும்பிய கோமதி மாரிமுத்துவிற்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசுகள் உதவிக்கரம் நீட்டினால், தன்னால் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியின் மகளிடர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தமிழக வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை 2 நிமிடம் இரண்டு ஏழு விநாடிகளில் கடந்து அவர் சாதனை புரிந்தார். இதனையடுத்து சென்னை திரும்பிய அவருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது கிராமத்தில் உரிய பேருந்து வசதி கூட இல்லை எனவும், மத்திய மாநில அரசுகள் உதவி புரிந்தால், தன்னால் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.