மெரீனா கடலில் நீந்தி 5 வயது சிறுமி சாதனை : கடலில் நீந்துவதற்கு துணிச்சலே முக்கியம் - ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு
May 22 2019 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையைச் சேர்ந்த லோகிதா சராக்சி என்ற 5 வயது சிறுமி, மெரினா கடலில் 5 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனைப் படைத்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மஹிமைதாஸ். காவலராக பணியாற்றும் இவரும் தேசிய நீச்சல் வீரர் ஆவார். இவர், தனது குழந்தை லோகிதா சராக்சிக்கு ஒன்றரை வயதிலிருந்தே நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார். நீச்சல் பயிற்சியாளர் திரு. இளங்கோ என்பவரிடம் பயிற்சி பெற்று வரும் சிறுமி லோஹிதா சராக்ஸி, சென்னை மெரினாவில் பட்டினப்பாக்கம் முதல், கண்ணகி சிலை பகுதி வரை 5 கிலோ மீட்டர் கடலில் நீந்தி சாதனைப் படைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற ரயில்வே டி.ஜி.பி. திரு. சைலேந்திர பாபு, கடலில் நீந்துவதற்கு துணிச்சல்தான் மிக முக்கியம் என்றும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே சிறுமி, கடலில் நீந்தியதாகவும் தெரிவித்தார்.