சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பேட்மின்டன் போட்டி - இந்தியாவின் பி.வி.சிந்து, சாய் பிரனீத் காலிறுதிக்கு முன்னேற்றம்
Aug 23 2019 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாய் பிரனீத் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
உலக பேட்மிண்டன் போட்டி தொடர் சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து அமெரிக்க வீராங்கனை பெய்வென்னை 21-14, 21-6 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதி போட்டிக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் இந்தோனேசியாவின் ஆண்டனி ஷினிசுகாவை 21-19, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறினர்.