தென்கொரியாவில் நடைபெற்ற யோகா போட்டியில் வென்றவருக்கு உற்சாக வரவேற்பு - பிற மாநிலங்களை போல் தமிழக அரசு உதவவில்லை என வேதனை
Sep 14 2019 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கொரியாவில் நடைபெற்ற யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்று நாடு திரும்பிய தர்மதேஜாவிற்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜெயா தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், குஜராத், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்கள் யோகா போட்டியாளர்களுக்கு உதவி செய்வதாகவும் தமிழக அரசு போதிய உதவிகளை செய்யவில்லை என்றும் வேதனை தெரிவித்தார்.