தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலை நடத்த அனுமதி : உத்தரவு வரும்வரை முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
Sep 20 2019 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால், மறு உத்தரவு வரும்வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்திக் கொள்ள அனுமதிக்கும்படி, இந்த அமைப்பின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மூத்த வழக்கறிஞர் திரு. கபில் சிபல் ஆஜரானார். அப்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாரியத்தின் சட்டத்திட்டங்களுக்கு இசைந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடந்துகொள்வதில்லை என குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் திரு. S.A. Bode, மற்றும் திரு. எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால், இந்த வழக்கில் நீதிமன்றம் தீப்பளிக்கும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.