உலக மல்யுத்த சாம்பியன் போட்டி : இந்திய மல்யுத்த வீரர் ராகுல் அவேர் அரையிறுதிக்கு முன்னேற்றம் - ஒலிம்பிக்கில் விளையாட தீபக் புனியா தகுதி
Sep 21 2019 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் தீபக் புனியா, 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
உலக மல்யுத்த சாம்பியன் போட்டி, கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில், ஆடவர் 61 கிலோ எடை பிரிவில், இந்திய மல்யுத்த வீரர் ராகுல் அவேர், கஜகஸ்தான் வீரர் ரசுல் கலியேவ்வை எதிர்கொண்டார். இதில், 10-க்கு 7 என்ற புள்ளி கணக்கில், ராகுல் அவேர் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
இதேபோல் 86 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா, கொலம்பியாவைச் சேர்ந்த Carlos Izquierdo-ஐ எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற்ற தீபக் புனியா, ரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். மேலும், தீபக் புனியா 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இதுவரை இந்திய வீரர்கள் 4 பேர் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.