5 மாநிலங்கள் அளவிலான ஹாக்கி போட்டி : தூத்துக்குடி அணியை வீழ்த்தி சென்னை சிட்டி அணி சாம்பியன்
Sep 30 2019 9:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் - நாகரசம்பட்டி நேரு ஹாக்கி கிளப் மற்றும் மோகன் நினைவு ஹாக்கி குழு சார்பில், மாநில அளவிலான 34வது ஹாக்கிப் போட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் இருந்து 36 அணிகள் கலந்துகொண்டன.
இதன் இறுதிப் போட்டியில் சென்னை அணியும் தூத்துக்குடி மாவட்ட அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி முடிவில் சென்னை சிட்டி அணி 5 கோல்கள் அடித்து, தூத்துக்குடி அணியை தோற்கடித்தது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை வென்றது.