19 வயதிற்குட்பட்ட பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி : தமிழக அணி வீரர்கள் தேர்வு
Oct 4 2019 10:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூர் மாவட்டத்தில், தேசிய அளவிலான பூப்பந்தாட்ட அணிக்கு தமிழக அணி சார்பில் விளையாடும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இந்திய பள்ளிக் கல்வி குழுமத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு, தமிழக அணி வீரர்களை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் 36 மாணவர்களும், மாணவிகள் பிரிவில் 36 மாணவிகளும் கலந்துகொண்டனர். போட்டியில் ஆடவர் பிரிவில் அரியலூர், தஞ்சாவூர் சென்னை திண்டுக்கல் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட அணியினர் வருகின்ற நவம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.