ரஷ்யாவில் நடைபெறும் உலக மகளிர் குத்துச்சண்டை - கொலம்பியா வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் மேரிகோம்
Oct 10 2019 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் பட்ட தொடரின் காலிறுதி போட்டியில், கொலம்பியா வீராங்கனையை வீழ்த்தி, இந்திய வீராங்கனை மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ரஷ்யாவில், உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் பட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 51 கிலோ எடைப் பிரிவில், 6 முறை உலக சாம்பியனான, இந்தியாவின் மேரி கோம் பங்கேற்றுள்ளார். இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டி ஒன்றில் அவர் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இன்கிரிட் வாலன்சியாவை சந்தித்தார். இதில் மிகச்சிறப்பாக செயல்பட்ட மேரி கோம் அதிக புள்ளிகளைக் குவித்து வெற்றிபெற்றார். இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதைத்தொடர்ந்து உலக சாம்பியன் பட்ட தொடரின் 51 கிலோ பிரிவில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.
அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற மேரி கோமுக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு பாராட்டு தெரிவித்துள்ளார்.