இந்தியா- தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி : ராணுவ வீரர்களுக்கு இலவச டிக்கெட்

Oct 18 2019 8:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ராணுவ வீரர்களுக்கு ஐந்தாயிரம் டிக்கெட் இலவசமாக வழங்கப்போவதாக, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டிலும், புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நாளை தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்கு ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் என்.சி.சி.யை சேர்ந்தவர்கள் என, ஐந்தாயிரம் பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, கிரிக்கெட் போட்டியைக் காண இலவச டிக்கெட் வழங்கப்படுவதாக, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00