தென் ஆப்ரிக்கா - இந்தியா இடையேயான 3வது டெஸ்ட் : கோலி, புஜாரா, மயாங் அகர்வால் சொதப்பல் - ரோகித் சர்மா, ரஹானே பொறுப்பான ஆட்டம்
Oct 19 2019 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சிஸில் இந்திய வீரர் ரோகித் சர்மா தனது சதத்தை பதிவு செய்தார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. மயாங் அகர்வால், புஜாரா, கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடி சதத்தை நிறைவு செய்தார். மற்றொரு வீரர் ரஹானே தனது அரை சதத்தை நிறைவு செய்தார். இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. இந்நிலையில் இந்திய அணி 224 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.