பங்களாதேஷ் கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் : பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
Oct 22 2019 2:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி திட்டமிட்டபடிஅடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் என பிசிசிஐயின் தலைவர் திரு.சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று டி-20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அந்த அணியின் ஊழியர்கள், சம்பள விவகாரம் குறித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் பங்களாதேஷ் அணி இந்தியா வருமா? என்பது சந்தேகமாகியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி, பங்களாதேஷ் வீரர்களின் ஊதியப் பிரச்சனை சுமுகமாக முடிந்து, அவர்கள் இந்தியா வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு, பங்களாதேஷ் பிரதமர் ஹசினாவுக்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது அந்த கோரிக்கையை ஏற்று கொல்கத்தா வருவதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கங்குலி கூறினார்.