33 மாதங்களுக்‍குப்பின் மும்பையில் கூடிய பி.சி.சி.ஐ. பொதுக்‍குழு கூட்டம் - தலைவராகப் பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி

Oct 23 2019 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் இன்று 33 மாதங்களுக்‍குப்பின் நடைபெற்ற இந்திய கிரிக்‍கெட் வாரியத்தின் பொதுக்‍குழு கூட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைவராக பொறுப்பேற்றார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. 33 மாதங்களுக்‍குப்பின் நடைபெறும் இந்த பொதுக்‍குழு கூட்டத்தில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். இதன்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். இதேபோன்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய்ஷா, பொருளாளராக மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் தம்பியும், ஹிமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க தலைவருமான அருண் துமால், இணைசெயலாளராக கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ், துணை தலைவராக மஹிம் வர்மா உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்‍கொண்டனர். இன்றுடன் பிசிசிஐ பணிகளை கவனித்து வந்த வினோத்ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டியின் செயல்பாடுகள் முடிவுக்‍கு வந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00