மாநில அளவிலான பாடிபில்டிங் போட்டி : பெண்களுக்கான பிரிவில் ஷெனாஸ் பேகம் தங்கம் வென்றார்
Nov 4 2019 9:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பாடிபில்டிங் போட்டியில், பெண்களுக்கான பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஷெனால் பேகம் தங்கப்பதக்கம் வென்றார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில், மாநில அளவிலான பாடிபில்டிங் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அமெச்சூர் பாடிபில்டிங் அமைப்பு சார்பில், ஆண்கள் மற்றும் பெண்கள் என, இரண்டு பாலருக்கும் நடைபெற்ற இந்த போட்டிகளில், 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், 21 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பாடிபில்டிங் போட்டி முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்கள் உடல் திறனை வெளிப்படுத்தினர். பெண்களுக்கான பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஷெனாஸ் பேகம் தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.