காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சதுரங்க போட்டி : தேசிய அளவில் 1800 பேர் பங்கேற்பு
Nov 8 2019 10:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் மகாத்மாகாந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி தேசிய அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.
மகாத்மாகாந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி மகாத்மாகாந்தி நூற்றாண்டு கல்வி நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான செஸ் போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது. 7, 10, 12, 14, 16 வயதிற்குட்பட்டோர் மற்றும் மூத்தோர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஓப்பன் பிரிவுகளாக நடத்தப்படும் இந்த போட்டியில் பங்கேற்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து செஸ் வீரர், வீராங்கணைகள் ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து பங்கேற்றிருந்தனர்.
இப்போட்டியில் அங்கீகரிக்கப்பட்ட சதுரங்க வல்லுநர்கள் நடுவர்களின் மேற்பார்வையில் அதிக புள்ளிகளைப் பெறும் வீரர் வீராங்கணைகள் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு 51 கிராம் தங்கம், ஆயிரத்து 320 கிராம் வெள்ளி மற்றும் 100 சுழற்கோப்பைகள் மற்றும் மிதிவண்டிகளும் பரிசுகளாக வழங்கப்படவுள்ளது.