மக்கள் நலப்பணிகளில் மெத்தனம்காட்டி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் - தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம்
Feb 5 2018 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நலப்பணிகளில் மெத்தனம்காட்டி வருவதாக குற்றம் சாட்டி, அமைச்சர் கடம்பூர் ராஜூவை, பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கணேசன் காலனியில், நிகழ்ச்சி ஒன்றுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று காலை வந்திருந்தார். அப்போது, அப்பகுதியைச்சேர்ந்த ஏராளமான பெண்கள், அமைச்சரை திடீரென முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியில் பல வருடங்களாக சாலை வசதி மற்றும் குடிநீர் முறையாக வழங்கப் படவில்லை எனக் கூறி, அமைச்சருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.